Pages

Tuesday, January 22, 2013

[hymn 149] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

149:

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.



பொருள் விளக்கம்
-------------------------=
நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலை வனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.

Romanized
---------------
maṉṟattē nampi māṭam eṭuttatu
maṉṟattē nampi civikaipeṟ ṟēṟiṉāṉ
maṉṟattē nampi mukkōṭi vaḻaṅkiṉāṉ
ceṉṟattā eṉṉat tirintilaṉ tāṉē.


 Meaning-[Pomp and Glory Lead But to the Grave]
------------------------------------------------------------------
In pride of pomp a stately mansion he built,
In rage of wealth into the palanquin he stept,
In vain excess gave away largesse in crores,
But ne'er his soul sought the Lord's green retreat.

Sunday, January 20, 2013

[hymn 148] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


148: அடப்ண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மெடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
பொருள் விளக்கம்
------------------------------
ஆடுதல்-சமைத்தல். அடிசில்-உணவு. மடக்கொடி-பெண். மந்தணம்- உடலுறவு. இறை- இதயம். நொந்தது- வலித்தது.வாய்க்குச் சுவையாக நன்கு சமைத்து உணவை உண்டு மகிழ்ந்தனர். மனையாளோடு கூடிக் குலவி இன்புற்று மகிழ்ந்தார். திடீரென்று ஒருநாள் இடதுபக்கம் நெஞ்சு வலிக்கிறது என்றார். உடனே உடல் கீழே கிடக்கப் படுத்தார். பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. இதுதான் உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.
Romanized
--------------
aappaṇṇi vaittār aicilai uṇṭār
meakkoi yārou mantaa koṇṭār
iappakka mēyiai nontatu eṉṟār
kiakkap pauttār kiantoin tārē.
Meaning-[Death Comes Sudden]
-------------------------------------------
The rich repast was laid and he dined and joyed, 
With damsels sweet in amorous dalliance toyed; 
“A little little pain-- on the left” he moaned
And laid himself to rest to be gathered to dust.  

Saturday, January 19, 2013

[hymn 147] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

147:  
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே.

பொருள் விளக்கம்
-----------------------
`சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற் படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.
Romanized
--------------
 
cīkkai viḷaintatu ceyviṉai mūṭṭiṟṟa
ākkai pirinta talaku paḻuttatu
mūkkiṉiṟ kaivaittu mūṭiṭṭuk koṇṭupōyk
kākkaikku vuṇpali kāṭṭiya vāṟē.
  
Meaning-[Body Dead is but a Feed for Ravens ]
-------------------------------------------------


Gangrened the sore, the body that Karma shaped
Grew loose of joints, the roof's beam rotted and fell;
And with finger on nose, they bore the body dead,
A plenteous feast for the ravens to feed.