Pages

Friday, May 17, 2013

[hymn 191] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

191: சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

பொழிப்புரை
-------------
பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.

Romanized
------------
ceṉṟuṇar vāṉticai pattun tivākaraṉ
aṉṟuṇar vālaḷak kiṉṟa taṟikilar
niṉṟuṇa rārin nilattiṉ maṉitarkaḷ
poṉṟuṇar vāriṟ puṇarkkiṉṟa māyamē.

Meaning-[Our Days are Numbered]
-----------------------------------------
The sun's rays visit all the quarters ten,
But men measuring with their little sense know this not;
They ponder not nor on the deep mystery muse,
These men on earth--their minds in low passions caught.

Monday, May 6, 2013

[hymn 190] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


190:
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொழிப்புரை
-------------------
இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.

Romanized
--------------
vēṅkaṭa nātaṉai vētāntak kūttaṉai
vēṅkaṭat tuḷḷē viḷaiyāṭu nantiyai
vēṅkaṭam eṉṟē virakaṟi yātavar
tāṅkaval lāruyir tāmaṟi yārē. 

Meaning-[Body is an Empty Vessel]
----------------------------------------
The Lord of this body frail that to ashes turns, the Lord of Vedanta dance
Nandi He is, who in this crumbling frame disports
They, who know not what an empty vessel this body is,
They know not what the life sustains and supports.

Sunday, May 5, 2013

[hymn 189] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

189:
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

பொழிப்புரை
-------------------
பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.

Romanized
--------------
mattaḷi oṉṟuḷē tāḷam iraṇṭuḷa
attuḷḷē vāḻum amaiccumañ cuḷḷaṉa
attuḷḷē vāḻum aracaṉum aṅkuḷaṉ
mattaḷi maṇṇāy mayaṅkiya vāṟē. 

Meaning-[Life's Drum Shatters to Pieces]
-------------------------------------------
One this body-drum, two the rhythms keeping time,
Five the masters who, inside, make display;
But when the great king, indwelling, departed,
The drum lay shattered, a heap of inert clay.