Pages

Friday, January 4, 2013

[hymn 132] Daily 1 thirumanthiram with Explanation

132
பெற்றார் உலகியற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகியற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மென்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

பொருள் விளக்கம்
-------------------------------
இப்படிச் சிவசக்தி நடனம் காணப்பெற்றவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்தில், சிவ சிந்தனையிலிருந்து விலகாத (பிரியா) பெருநெறியாகத் தவயோகத்தில் தங்கி இருந்தனர் (நெறி – வழி).இதனால் அவர்கள் பிறவித் துயர் தொலைந்தது. எனவே மீண்டும் மண்ணில் வந்து பிறக்காத பெரும் புண்ணியப் பயன் அடைந்தனர். இறைவன் ஆனந்த நடனமிடும் அந்தப் பொன்னம்பலத்தை விட்டுப் பிரியாத பெரும் பாக்கியமும் பெற்றார்கள் ( பேறு- வாய்ப்பு). இவ்வளவுடன் அவர்கள் உலகமெல்லாம் போற்றி விளக்க முடியாத பெருமையும் பெற்றார்கள். உலகில் மற்றவர்களோடு கலந்து உரையாடாது, தனித்துத் தவமிருக்கும் அருவமாகவும் இருக்கும், யோக சித்தி பெற்றார்கள் என்றும் கொள்ளலாம்.  
Romanized
---------------
peṟṟār ulakiya piriyāp perunei
peṟṟār ulakiya piavāp perumpaya
peṟṟār ammeṉṟil piriyāp perumpēṟu
peṟṟār ulakua pēcāp perumaiyē.

Meaning –[Attainment of Deathlessness and Birthlessness]
-------------------------------------------------
In this world they received the Deathless Way great
In this world they attained the Birthless End great
The Gift unique of inseparateness from the Sabha pure
The ineffable rapture the glory beyond reach of words.

No comments:

Post a Comment