Pages

Thursday, February 28, 2013

[hymn 175] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


175:
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொழிப்புரை
-------------------
உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப் பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசை மிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.

Romanized
--------------
vēṭkai mikuttatu meykoḷvār iṅkilai
pūṭṭun taṟiyoṉṟu pōmvaḻi oṉpatu
nāṭṭiya tāytamar vantu vaṇaṅkippiṉ
kāṭṭik koṭuttavar kaiviṭṭa vāṟē.  

Meaning-[ Worldly Desires are Never-Ending]
------------------------------------
Our desires grow, but none the truth to find;
There's one stake to hold but nine exits to leave;
The old familiar faces come smiling to greet and bow;
Deceivers ever, they abandon us without a reprieve.