Pages

Thursday, January 24, 2013

[hymn 152] Daily 1 hymn of Thirumanthiram with Explanation



152
பந்தல் பிரிந்தது பதண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனை
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்கேள.

பொருள் விளக்கம்
------------------------------
பந்தல்-உடலாகிய மேல் போர்வை. பண்டாரம்- களஞ்சியம்-உயிராகிய பொக்கிசம். ஒன்பது வாசல்- உடலில் உள்ள ஒன்பது வழிகள். கண்கள் இரண்டு,செவிகள் இரண்டு. மூக்கு துவாரங்கள் இரண்டு. வாய் ஒன்று, சிறுநீர், மலப்பாதை என ஒன்பது.ஒக்க – ஒருசேர.துரிசுவர- முடிவுகாலம் நெருங்க. உயிரின் மேல் அமைந்லுடலாகிய பந்தல் பாழடைந்து விட்டது. உயிர்ச் செல்வம் வறண்டு விட்டது.ஒன்பது வாசல் கதவுகளும் ஒரே நேரத்தில் அடைத்து விட்டன.உயிர்க்கு முடிவுகாலம் வந்து விட்டது.அன்புடைய சுற்றத்தார் அழுது புலம்பினார்கள். பின்னவர்களும் போய்விட்டனர். இதுதான் வாழ்க்கை, உலகியல் என்பது உணர்த்தும் பாடல் இது.

Romanized
--------------
pantal pirintatu pataṇṭāraṅ kaṭṭaṟṟa
oṉpatu vācalum okka aṭaittaṉai
tuṉpuṟu kālan turicuvara mēṉmēl
aṉpuṭai yārkaḷ aḻutakaṉ ṟārkēḷa.

Meaning-[Kith and Kin Wept and Left]
---------------------------------------------------
The roof to pieces went the bonds of life broke loose,
The mansion’s nine gates closed fast for ever and aye,
Time’s painful march fast gaining apace,
One by one weeping they left him as the hours passed by.