Pages

Tuesday, December 25, 2012

Daily 1 hymn of Thirumanthiram with Explanation-[hymn-122]

122:
சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே.

பொருள் விளக்கம்
----------------------------
சிவயொகம் என்றால் என்ன? முன் பாடலில் சிவயொகிகள் செத்தவர்கள் பொலிருப்பர் என்று சொன்ன திருமூலர், இப்பாடலில் சிவயோகம் என்றால் என்ன என்பதை விளக்குகிறார். சிவயோகமாவது - சித்து, அசித்து என்னும் உயிர்ப் பொருள். ஜடப் பொருள் என்னும் இரண்டொடும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு ( தவ - விடுபட்டு ) யோக நிட்டையில் தன் உள்ளொளியும் (தன் ஒளி) தன் உயிர் உணர்வும் ஒன்றாய் (தானாய்) பிறப்பு இறப்புகளுக்குக் காரணமான, வேறு வழிச் செல்லாமல் (அவயோகம்). இறைவன் திருவடிப் பேற்றினை (அவன் பதி) அடைதல். இது நவயொகம். நல்ல வழி. இதை நந்தி எம்பெருமான் நமக்கருளினான், நவ யோகம்மாவது - ஆத்ம பூசை, உள்ளத்துள் உள்ள இறைவனை உணர்வொன்றி வழிபடுதல். அவம் - கேடு.

Romanized
------------------
civayōka māvatu cittacit teṉṟu
tavayōkat tuḷpukkut taṉṉoḷi tāṉāy
avayōkañ cārātu avaṉpati pōka
navayōka nanti namakkaḷit tāṉē.

MEANING-[Sivayoga is to Attain Self-Lumination ]
---------------------------------------------------------------------------------
Sivayoga it is to know the Cit-Acit,
And for the Yoga-Penance qualify;
Self-light becoming Self,
To enter undeviating, His lordly domain;
He granted me this--Nandi of the Nine Yogas.