Pages

Wednesday, July 3, 2013

[hymn 209] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

209:
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

பொழிப்புரை
-------------
`பிற உயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.

Romanized
------------
kolaiyē kaḷavukaḷ kāmam poykūṟal
malaivāṉa pātaka māmavai nīkkat
talaiyām civaṉaṭi cārntiṉpañ cārntōrk
kilaiyām ivaiñāṉā ṉantat tiruttalē.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"