Pages

Friday, January 11, 2013

[hymn 139] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


139
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
பொருள் விளக்கம்
--------------------------------

குருநாதரின் அழகிய திரு உருவைக் கண்டு வணங்குதல் அறிவுக்கு விளக்கமாகும். குருவின் திருப் பெயரைத் தியானித்தல் கூட அறிவு மேம்பட உதவும். குருவின் அருளுரைகளைக் கேட்பது அறிவை விசாலமடையச் செய்யும். இவை எல்லாவற்றையும் விட, அந்த நானாசிரியனின் திரு உருவை நெஞ்சில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே, நினைவால் தொழுவதும் அறிவின் விளக்கம்- அறிவுக்கு விளக்கம் ஆகும். தெளிவு என்பதற்கு அறிதல், விளக்க முறல் எனப் பல பொருள்கள் உண்டு. திருவருளைப் பெறவும் குருஅருளே துணை செய்யக் கூடுமாதலால், குரு அருளின் பெருமை கூறப்பட்ட்து.
Romanized
-------------
teivu kuruvi tirumēṉi kāṇṭal
teivu kuruvi tirunāmañ ceppal
teivu kuruvi tiruvārttai kēṭṭal
teivu kuruvuru cintittal tāṉē.
Meaning [Guru’s Role in Soul’s illumination]
------------------------------------------------------
It is but to see the Guru’s Holy Form,
It is but to chant the Guru’s Holy Name,
It is but to hear the Guru’s Holy Word,
It is but to muse the Guru’s Holy Being.