Pages

Thursday, January 17, 2013

[hymn 145] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


145
 ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
போனை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

பொருள் விளக்கம்
---------------------------------
உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.




Romanized
--------------
ūrelām kūṭi olikka aḻutiṭṭup
pōṉai nīkkip piṇameṉṟu pōṭṭuc
cūraiyaṅ kāṭṭiṭaik koṇṭupōyc cuṭṭiṭṭu
nīriṉil mūḻki niṉaippoḻin tārkaḷē. 


Meaning-[How Soon the Dead are Forgotten]
-----------------------------------------------------------
The neighbours gathered wailing loud and long, 
Denied him now a name, called him corpse, 
And bore him to the burning ghat and the body burnt, 
Then a ceremonial dip--and memory dies as the hours lapse.