Pages

Friday, September 6, 2013

[hymn 227] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

அந்தணர் ஒழுக்கம் - DHARMA OF ANTHANAN

227:
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

பொழிப்புரை
-------------
அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.

Romanized
------------
kāyat tiriyē karutucā vittiri
āytaṟ kuvappar mantiramāṅ kuṉṉi
nēyattē rēṟi niṉaivuṟṟu nēyattāy
māyattuḷ tōyā maṟaiyōrkaḷ tāmē.
reference:
http://www.thevaaram.org/

No comments:

Post a Comment