Pages

Wednesday, May 29, 2013

[hymn 197] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

கொல்லாமை [NOT KILLING]
-----------------------

197:
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.


பொழிப்புரை
-------------
மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.

Romanized
------------
paṟṟāya naṟkuru pūcaikkum paṉmalar
maṟṟōr aṇukkaḷaik kollāmai oṇmalar
naṟṟār naṭukkaṟṟa tīpamuñ cittamum
uṟṟārum āvi amarntiṭam ucciyē.

Meaning-[Don't Kill Even an Atom of Life]
----------------------------------------------
Flowers many to dear, loved Master's worship;
Even one atom of life, kill not:
The lovely garland, the steady flame, the firm will,
The passionate heart--such the worship's crowning part.

reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Tuesday, May 28, 2013

[hymn 196] Daily 1 hymn of Thirumanthiram with Explanation

196:
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.

பொழிப்புரை
-------------
வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

Romanized
------------
avviyam pēci aṟaṅkeṭa nillaṉmiṉ
vevviya ṉākip piṟarporuḷ vavvaṉmiṉ
cevviya ṉākic ciṟantuṇṇum pōtoru
tavviko ṭumiṉ talaippaṭṭa pōtē. 

Meaning-[Share With Others Before You Eat]
-----------------------------------------
Speak not in envy, stray not from the Dharmic way,
Covet not other's riches with lustful greedy glances;
With heart to pity attuned, as you sit down to eat,
Share with others before the feast commences.


reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"

Monday, May 27, 2013

[hymn 195] Daily 1 hymn of Thirumanthiram with Explanation


195:
ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

பொழிப்புரை
-------------
மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசுபுண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுத லாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.

Romanized
------------
āmviti nāṭiṉ aṟañceymiṉ annilam
pōmviti nāṭiṉ puṉitaṉaip pōṟṟumiṉ
āmviti vēṇṭuma teṉcoliṉ māṉiṭar
āmviti peṟṟa arumaival lārkkē.

Meaning-[Pray and Perform Noble Deeds-This is the Law of Life
Eternal]
-----------------------------------------
Perform thou noble deeds, good Karma to shape,
Praise thou the Holy One, the Holy Land to reach;
This is the law we need, this the law for men
ho, blessed with earthly life, seek the Life eternal.



reference:
http://www.thevaaram.org/
Book-"Tirumantiram- ENGLISH TRANSLATION OF THE TAMIL SPIRITUAL CLASSIC"